குறும்செய்திகள்

நீர்வேலியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி காதலனுடன் கைது..!

Neervely kidnapped woman arrested with boyfriend

நீர்வேலி வடக்கு பகுதியில், நேற்று முன்தினம் வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி கோப்பாய் பொலிஸாரால் நேற்று மாலை மல்லாகம் பகுதியில் வைத்து அவரின் காதலனுடன் மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..,

நேற்று முன்தினம், நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் 4 பேர் கொண்ட கும்பல் 20 வயது மதிக்கதக்க யுவதி ஒருவரை வேனில் கடத்திச் சென்றதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிசார் மல்லாகம் பகுதியில் வைத்து நேற்று மாலை யுவதியையும் கூட்டிச்சென்ற பிரதான சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி குறித்த இளைஞனை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், பெற்றோர் யுவதிக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்த வேளையில் யுவதி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இளைஞன் யுவதியை கூட்டிக் கொண்டும் சென்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், “நான் வெள்ளை வேனில் செல்லவில்லை, மோட்டார் சைக்கிளில் சென்றே யுவதியை அழைத்துச் சென்றேன், இவரின் பெற்றோர் வேண்டுமென்றே என் மீது குற்றம் சுமத்தி உள்ளனர்” என பொலிஸ் விசாரணையில் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யுவதியும் இளைஞனும் நாளை யாழ்ப்பாணம் நீதிமன்றம் உட்படுத்தப்படும் அதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

< Most Related News >

Tags :-Neervely kidnapped woman arrested with boyfriend

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எவ்வாறு..?

Tharshi

சிவப்பு பட்டியல் நாடுகளில் இருந்து வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு : டெர்மினலை திறக்கும் ஹீத்ரோ விமான நிலையம்..!

Tharshi

ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் 19,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

Leave a Comment