நாளை அதிகாலை 4 மணி முதல் உடன் அமுலாகும் வகையில் நுவரெலியா மாவட்டத்தின் வட்டவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட லொனெக் மற்றும் வெலிஓயா ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கினிகத்தேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மொரகஹஹேன மற்றும் மில்லகஹமுல்ல ஆகிய பகுதிகளும் நாளை அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Isolated areas from early tomorrow morning