குறும்செய்திகள்

தமிழகத்தில் இன்று 33,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tamilnadu reports 33764 new COVID cases and 151 deaths

தமிழகத்தில் இன்று 33,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒரே நாளில் 475 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,

“1,72,424 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 33,764 ஆக உள்ளது. தமிழகத்தில் மேலும் 33,764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 19,45,260 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் ஏற்கனவே 4,041 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 3,561 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 3,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 278 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 198 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவால் ஒரே நாளில் 475 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,815 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணைநோய்கள் இல்லாத 128 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையில் மட்டும் மேலும் 98 பேர் உயிரிழந்தனர்.

கொரோனாவில் இருந்து மேலும் 29,717 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 16,13,221 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3,10,224 ஆக அதிகரித்துள்ளது.

12 வயதிற்குட்பட்ட 1,325 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஏப்ரல் 5-ம் தேதி 128 குழந்தைகளுக்கு கொரோனா உறுதியான நிலையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 2,68,14,056 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,72,424 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 7,94,030 பேர் ஆகும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tamilnadu reports 33764 new COVID cases and 151 deaths

Related posts

முதலீட்டுச் சபை (BOI) உறுப்பினர்கள் சிலர் பதவி விலகல்..!

Tharshi

சங்கிலி விளையாட்டு : Scout Game

Tharshi

ரசிகர் செயலால் ஆத்திரம் : கார் கதவை அறைந்து சாத்திய பிரபல நடிகை..!

Tharshi

Leave a Comment