குறும்செய்திகள்

29-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

29th May Today Raasi Palankal

இன்று மே 29.2021

பிலவ வருடம், வைகாசி 15, 29.5.2021
சனிக்கிழமை, தேய்பிறை, திரிதியை திதி காலை 10:53 வரை,
அதன்பின் சதுர்த்தி திதி, பூராடம் நட்சத்திரம் இரவு 10:38 வரை,
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : ரோகிணி, மிருகசீரிடம்
பொது : அக்னி நட்சத்திரம் முடிவு, சங்கடஹரசதுர்த்தி.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.
பரணி: இதுவரை உடன்பிறந்தோரால் ஏற்பட்ட வருத்தங்கள் விலகும்.
கார்த்திகை 1: வெளிநாட்டு முயற்சிகளுக்கு நல்ல பதில் கிடைக்கும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: முன்னேற்றத்துக்கு அதிக முயற்சி வேண்டி இருக்கும்.
ரோகிணி: தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம்
மிருகசீரிடம் 1,2: நகைச்சுவை என நினைத்து யாரையும் புண்படுத்தாமல் பேசுங்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: மற்றவர் பொருளைக் கையாள்கையில் கவனம் தேவை.
திருவாதிரை: பயண ஏற்பாடுகளில் சமீபத்தில் ஏற்பட்ட தடை அகலும்.
புனர்பூசம் 1,2,3: நம்பிக்கை அதிகமாகி நேற்றைவிட நிலைமை உயரும்.

கடகம்:

புனர்பூசம் 4: எதிலும் விலகி நிற்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பூசம்: வார்த்தையால் நன்மை வரும். மனசஞ்சலங்கள் நீங்கும்.
ஆயில்யம்: நெருங்கிய உறவினர் ஒருவரின் உடல் நிலை சீராகும்.

சிம்மம் :

மகம்: உறவினர்களால் சந்தோஷம் கிடைக்கும். மன நிம்மதி நீளும்.
பூரம்: நண்பரிடமிருந்து நல்ல விஷயங்கள் சிலவற்றைக் கற்பீர்கள்.
உத்திரம் 1: குடும்பத்திலும், அலுவலகத்திலும் கலகலப்பான சூழல் நிலவும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: புதிய துறையில் ஈடுபட்டு, முதலீடுகள் செய்வீர்கள்.
அஸ்தம்: பாராட்டு கிடைப்பதால் திருப்தி உண்டாகும். நண்பர்கள் உதவுவர்.
சித்திரை 1,2: சீனியர்களின் ஆலோசனை கிடைக்கும். தாயார் மூலம் செலவு வரும்.

துலாம்:

சித்திரை 3,4: நீங்கள் முன்பு செய்த உதவி காரணமாக நன்மை வரும்.
சுவாதி: வியாபாரத்தில் புது முயற்சிகளை மேற்கொண்டு வெல்வீர்கள்.
விசாகம் 1,2,3: ஒன்றிற்கு மேற்பட்ட வேலைகளைத் திறம்படச் செய்வீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம்.
அனுஷம்: நீண்ட நாளைய ஆரோக்யப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்
கேட்டை: குற்றம் சொல்பவர்கள் தலை குனியும்படியான செயலை செய்வீர்கள்.

தனுசு:

மூலம்: கலையார்வம் வரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.
பூராடம்: பெற்றோரால் சங்கடம் ஏற்பட்டாலும் அதனால் நன்மை உண்டாகும்.
உத்திராடம் 1: சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் யோசித்து முடிவு எடுங்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: சண்டைகள் தீர்ந்து குடும்ப வாழ்வு இனிமையாக மாறும்.
திருவோணம்: எதையும் நிதானித்து செய்கிறீர்கள். மன திடம் அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2: வேற்று மொழி பேசுபவரால் நன்மை அடையப் போகிறீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: நல்ல நோக்கத்துடன் செய்யும் செயல்கள் விமர்சிக்கப்படலாம்.
சதயம்: சகோதர, சகோதரிகளால் முன்பு ஏற்பட்ட கவலை நீங்கும்.
பூரட்டாதி 1,2,3: வயிற்று ஆரோக்கியத்தில் சிறு தொல்லை ஏற்பட்டு மறையும்.

மீனம்:

பூரட்டாதி 4: தொழில் செய்பவர்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
உத்திரட்டாதி: பணியாளர்கள் சோர்வு அடைவீர்கள். பாராட்டுக் கிடைக்கும்.
ரேவதி: செலவுகளை குறைக்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.

29th May Today Raasi Palankal

Related posts

சனிபகவானின் தொந்தரவு இல்லாமல் இருக்க இதை மட்டும் வீட்டில் செய்து பாருங்க..!

Tharshi

மார்ச் 10இல் தேர்தல்…!

Tharshi

பிரைவசி பாலிசி விவகாரத்தில் அப்படி செய்ய மாட்டோம் : வாட்ஸ்அப் அளித்த விளக்கம்..!

Tharshi

Leave a Comment