முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதனால், உடலில் நீர்ச்சத்து அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும்.
அந்தவகையில் இன்று முள்ளங்கி கூட்டு எவ்வாறு செய்வதென்று பார்ப்போமா..?
தேவையான பொருட்கள் :
முள்ளங்கி – கால் கிலோ
வெங்காயம் – 1 பெரியது
தக்காளி – 2
கறிவேப்பிலை – 1 கொத்து
மஞ்சள்தூள் – சிறிதளவு
தனி மிளகாய்த்தூள் – காரத்திற்கேற்ப
உப்பு – தேவைக்கு
சிறு பருப்பு – 50 கிராம்
கடுகு, சீரகம் – தாளிக்க
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* முள்ளங்கியின் தோலை சீவி விட்டு அதனை சிறு சிறு துண்டாக வெட்டி வைக்கவும்.
* சிறு பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குக்கரில் ஊறவைத்த பருப்புடன் முள்ளங்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், தனி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அத்துடன் 1/4 கப்பிற்கும் குறைவாக தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு இரண்டு விசில் வரை வேக விடவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வேகவைத்த முள்ளங்கி கூட்டில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
குறிப்பு : இதனை சட்டியிலும் சமைக்கலாம். நீர் சத்துள்ள காய்கறி என்பதால் சமைக்கும் போது அதிகம் தண்ணீர் விட்டு வேக வைக்க தேவை இல்லை.