தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் மூன்று விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,
தடகள பயிற்சியாளர் நாகராஜன் விளையாட்டு பயிற்சியின் போது, பாலியல் தொந்தரவு அளித்ததாக விளையாட்டு வீராங்கனை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 29 ஆம் திகதி நாகராஜன் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது சிறையில் அடைக்கப்பட்ட நாகராஜனை 3 நாள் காவலில் எடுத்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் மூன்று விளையாட்டு வீராங்கனைகள் தங்களுக்கும் விளையாட்டு பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளனர்.