பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின், தண்ணீர் கட்டணத்தை செலுத்த முடியாத வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பலருக்கு கட்டணம் செலுத்த முடியாமல் போயுள்ளதாகவும், அதனடிப்படையில் அவ்வாறானவர்களுக்கு ஒரு மாத காலம் சலுகை வழங்கப்படவுள்ளதாகவும், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.