கடந்த சில தினங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, இதுவரை 176,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.