கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிறந்து 8 நாட்களேயான குழந்தை ஒன்று, கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 25 ஆம் திகதி பிறந்த குழந்தை 27 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியிருந்தது.
வீட்டிற்கு வந்ததை அடுத்து காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த குழந்தை இன்று உயிரிழந்துள்ளது.
கம்பளை, புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.