கொரோனா தொற்றுக்கு உள்ளான, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவி பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுக்கு கடந்த 23 ஆம் திகதி தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், பூரண குணமடைந்த அவர்கள் இன்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.