இந்தியா முழுவதும் கொரோனா 2 ஆம் அலையில் 719 டாக்டர்கள் பலியாகியுள்ளதாக, இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதில் அதிகபட்சமாக, பீகார் மாநிலத்தில் 111 டாக்டர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
அத்துடன், டெல்லியில் 109 டாக்டர்கள் கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டு அதே நோய்க்கு உயிரிழந்தனர்.
கொரோனா 2 வது அலையில்உத்தரப் பிரதேசத்தில் 79 டாக்டர்களும் மேற்கு வங்காளத்தில் 63 பேரும், ராஜஸ்தானில் 43 பேரும் கொரோனா பணியில் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.
மேலும், தென் மாநிலங்களில் ஆந்திராவில் 35 டாக்டர்களும், தெலுங்கானாவில் 36 டாக்டர்களும், தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, 32 டாக்டர்கள் உயிரிழந்ததுடன், கர்நாடகவில் 9 பெரும், கேரளாவில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர்.