பிரபல நடிகை ஒருவர், பிரபல நிறுவனம் ஒன்றிடமிருந்து இந்தியில் இரண்டு படங்களில் நடிப்பதற்கான வந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம்.
தமிழில் நடித்து பிரபலமான நடிகைகள், தெலுங்கு சினிமாவில் நுழைந்து அடுத்ததாக பாலிவுட்டுக்கு செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
ஆனால், அந்த வாய்ப்பு பல நடிகைகளுக்கு கிடைப்பது இல்லை. தற்போது ஒரு நடிகைக்கு வாய்ப்பு கிடைத்தும் பட வாய்ப்பை மறுத்திருக்கிறாராம்.
மலையாளத்தில் “காதல்” படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நடிகை தற்போது தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறாராம்.
இந்நிலையில், நடிகைக்கு பிரபல நிறுவனம் ஒன்றிடமிருந்து இந்தியில் இரண்டு படங்களில் நடிப்பதற்கான அழைப்பு தேடிவந்ததாம். ஆனால் கொஞ்சமும் யோசிக்காமல் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம் அந்த நடிகை.