பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை பாராளுமன்றமே தீர்மானிக்கும். அதனை வேறு எவரும் தீர்மானிக்க முடியாதென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். இல்லாவிடின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இரத்துச் செய்ய வேண்டுமென்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடன் இரத்துச் செய்ய வேண்டுமென்று அரசை வலியுறுத்துவதற்கு ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாதெனவும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.