உடன் அமுலாகும் வகையில், காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு, பதில் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக பதவி உயர்வு வழங்க காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றிடம் இருந்து கிடைக்கப் பெற்ற கடிதங்களின் பிரகாரம் இந்த பதவி உயர்வு தொடர்பான உத்தரவை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.