இலங்கைக்கு அருகில் கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
கிரிந்தை – மஹா இராவணன் கலங்கரை விளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில் 480 கடல்மைல்களுக்கு அப்பால் கப்பல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கப்பலின் இயந்திர அறையில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
“எம்எஸ்சி மெஸ்சினா” என்ற கப்பலிலே இவ்வாறு நேற்று (04) இரவு தீ விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இருந்து சிங்கபூர் நோக்கி பயணித்த லைபீரியா நாட்டிற்கு சொந்தமான பொருட்கள் கப்பலிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது.