குறும்செய்திகள்

கேரளாவில் புதிதாக 22,040 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

22040 new cases of corona infection confirmed in Kerala

கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் புதிதாக 22,040 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா 2வது அலையின் தீவிரம் கேரளாவில் இன்னும் குறையவில்லை. நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கு குறையாமல் உள்ளது. இதுதவிர, ஜிகா வைரசின் பாதிப்பும் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22,040 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34.93 லட்சமாக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு 117 பேர் இன்று பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 17,328 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிலிருந்து 20,046 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 32,97,834 ஆக அதிகரித்துள்ளது. 1,77,924 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர் என தெரிவித்துள்ளது.

22040 new cases of corona infection confirmed in Kerala

Related posts

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை : இதுவரை 14 பேர் மரணம் – 2 பேரை காணவில்லை..!

Tharshi

1,000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை உடையாமல் கண்டெடுப்பு : இஸ்ரேலில் ஆச்சரியம்..!

Tharshi

நாளை முதல் 24 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்..!

Tharshi

Leave a Comment