குறும்செய்திகள்

31-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

31st August Today Raasi Palankal

இன்று ஆகஸ்ட் 31.2021

பிலவ வருடம், ஆவணி 15, செவ்வாய்க்கிழமை,
தேய்பிறை, நவமி திதி நள்ளிரவு 3:52 வரை,
அதன்பின் தசமி திதி, ரோகிணி நட்சத்திரம் காலை 10:20 வரை,
அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அனுஷம்
பொது : துர்கை, முருகன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: அனைவரிடமும் நேசமுடன் பழகுவீர்கள். யோகம் கூடும்.
பரணி: வீண் செலவுகள் குறைந்து நிம்மதி வரும். உறவால் நன்மை உண்டு.
கார்த்திகை 1: பிறரால் ஏற்பட்ட மனக்கஷ்டம் அவர்களாலேயே நீங்கும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: குழந்தைகளின் செயல்களால் பெருமிதம் அதிகரிக்கும்.
ரோகிணி: திடீர் பயணம் உண்டு. வீடு, வாகனத்தால் வருமானம் வரும்.
மிருகசீரிடம் 1,2: பணியாளர்களுக்கு உற்சாகம் கூடும். நட்பு வட்டம் விரியும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: கடந்த கால இனிய அனுபவத்தைப் பகிர வாய்ப்பு வரும்.
திருவாதிரை: தேவையின்போது திடீர் உதவி கிட்டும். அன்பளிப்பு கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: மற்றவர்களை அனுசரித்து சென்று பலன் பெறுவீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: பிறர் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
பூசம்: நெருங்கிய நண்பரிடம் திடீர் இடைவெளி வந்தால் கவலை வேண்டாம்.
ஆயில்யம்: குழந்தைகளின் அறிவுத்திறனை கண்டு மகிழ்வீர்கள்.

சிம்மம் :

மகம்: சந்தோஷம் பெருகும்படியான எதிர்பாராத செலவுகள் வரும்.
பூரம்: எடுத்த விஷயங்களில் சிறுசிறு தடை, தாமதம் ஏற்படும்.
உத்திரம் 1: சவால்கள், வாக்குவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: கவனம் சிதறாமல் கடமையில் கண்ணாயிருப்பீர்கள்.
அஸ்தம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர ஆரம்பிக்கும்.
சித்திரை 1,2: உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: பழைய நட்பு ஒன்று மறுபடியும் கிடைக்கும்.
சுவாதி: குடும்பத்தின் அடிப்படை வசதி மேம்படும். வருமானம் வரும்.
விசாகம் 1,2,3: வெளியூர், வெளிநாட்டில் உள்ள உறவினர் மகிழ்ச்சியை பகிர்வர்.

விருச்சிகம்:

விசாகம் 4: பிரார்த்தனை ஒன்றை நிறைவேற்றி நிம்மதி அடைவீர்கள்.
அனுஷம்: அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.
கேட்டை: புதுமை படைக்கும் நாளாக இருக்கும். பிறரை வியக்க வைப்பீர்கள்.

தனுசு:

மூலம்: மற்றவர்களின் மனதைப் புரிந்து கொண்டு பேசுவது நல்லது.
பூராடம்: குடும்பத்தில் சண்டை ஏற்பட்டாலும் அதைத் தீர்த்து வைப்பீர்கள்.
உத்திராடம் 1: சீரான அணுகுமுறையால் நன்மை அடைவீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: எந்த ஒரு விஷயமும் சற்று நிதானமாக நடக்கும்
திருவோணம்: எதிர்ப்பை சமாளித்து முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
அவிட்டம் 1,2: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று தீர்மானிப்பீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: மனதில் இருந்த தீய எண்ணம் அகலும். மந்த நிலை வேண்டாம்.
சதயம்: புதிய கலையை கற்கும் விருப்பம் கைகூடும். உழைப்பு கூடும்.
பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் வாக்குவாதங்கள் குறைய காரணமாக இருப்பீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: பிரச்னை ஒன்று தீரும். மன உளைச்சல் நீங்கும்.
உத்திரட்டாதி: வேலை சம்மந்தமாக இருந்த அலைச்சல், அதிருப்தி நீங்கும்.
ரேவதி: சூழ்நிலையை அறிந்து விட்டுக் கொடுத்து பிரச்னையை தீர்ப்பீர்கள்.

31st August Today Raasi Palankal

Related posts

நான்கரை வயது குழந்தையை தரையில் தூக்கி அடித்த பரிதாபம்..!

Tharshi

ரிஷாத் பதியுதீன் தொடர்ந்தும் விளக்கமறியலில்..!

Tharshi

வெயில் காலத்தில் குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

Tharshi

Leave a Comment