குறும்செய்திகள்

நேற்றைய தினத்தில் நாட்டில் 175 பேர் கொரோனா தொற்றுக்கு பலி..!

175 people died of corona infection

நேற்றைய தினம் (08) 175 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,864ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில், நேற்றைய தினம் 102 ஆண்களும், 83 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இவ்வாறு உயிரிழந்தோரில் 30 வயதுக்கு குறைவான பெண்ணொருவர் அடங்குவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

30 வயதுக்கும், 59 வயதுக்கும் இடைப்பட்ட 19 ஆண்களும், 16 பெண்களுமாக மொத்தம் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 60 வயதுக்கு மேற்பட்ட 139 பேர் நேற்று உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 77 ஆண்களும், 62 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

175 people died of corona infection

Related posts

மீன் வியாபாரம் கடுமையாக வீழ்ச்சி : பச்சையாக மீன்களை உண்ணும் மீன் வியாபாரிகள்..!

Tharshi

Prime Minister of Portugal, Antonio Costa Arrives For A Meeting With European Union Leaders

Tharshi

3-வது டோஸ் தடுப்பூசி போட அமெரிக்கா அனுமதி..!

Tharshi

Leave a Comment