குறும்செய்திகள்

முதலிரவில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை : அதிர்ச்சியில் மனைவி..!

Suicide by hanging the new groom on the first night

முதலிரவில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்..,

மதுராந்தகம் அடுத்த பாலங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 31). இவர், கதிர் அறுக்கும் வாகனத்தை இயக்கும் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கும், திருமுல்லைவாயல் எஸ்.வி.டி. நகரில் வசிக்கும் இவருடைய அத்தை மகள் நந்தினி (24) என்பவருக்கும் நேற்று முன்தினம் செங்கல்பட்டு பகுதியில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பிறகு இரவில் திருமுல்லைவாயலில் உள்ள நந்தினியின் வீட்டுக்கு மணமக்கள் இருவரும் உறவினர்களுடன் வந்தனர். நேற்றுமுன்தினம் இரவு கார்த்திகேயன்-நந்தினிக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர்.

புதுமண தம்பதிகள் இரவில் நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அதிகாலை 3 மணியளவில் நந்தினி தூங்கி விட்டார்.

நேற்று அதிகாலை 6 மணியளவில் நந்தினி எழுந்து பார்த்தபோது, தனது கணவர் கார்த்திகேயன் வீட்டு கூரையில் உள்ள இரும்பு குழாயில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கணவரின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார். நந்தினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், கார்த்திகேயன் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயல் பொலிசார், தூக்கில் தொங்கிய கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுபற்றி பொலிசார் வழக்குப்பதிவு செய்து புதுமாப்பிள்ளை கார்த்திகேயனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

திருமணத்துக்காக நேற்றுமுன்தினம் களைகட்டி இருந்த இவர்களது வீடு, நேற்று புதுமாப்பிள்ளை தற்கொலையால் சோகத்தில் மூழ்கியது.

Suicide by hanging the new groom on the first night

Related posts

ஆப்பிள் டிவி HD விற்பனையை நிறுத்திய ஆப்பிள்..!

Tharshi

தொண்டமனாறு கடற்பரப்பில் 174 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது..!

Tharshi

டிக் டாக் செயலி தடை விவகாரம் : டிரம்பின் உத்தரவை ரத்து செய்தார் ஜோ பைடன்..!

Tharshi

1 comment

Leave a Comment