குறும்செய்திகள்

15-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

15th September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 15.2021

பிலவ வருடம், ஆவணி 30, புதன்கிழமை,
வளர்பிறை, நவமி திதி மதியம் 1:04 வரை,
அதன்பின் தசமி திதி, மூலம் நட்சத்திரம் காலை 8:22 வரை,
அதன்பின் பூராடம் நட்சத்திரம், மரண – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : ரோகிணி
பொது : விஷ்ணு வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள்.
பரணி: சிறு நன்மைகளும் சில மனஅழுத்தங்களும் உள்ள நாள்.
கார்த்திகை 1: பொறுமை காரணமாகப் பிரச்னைகளை ஊதித்தள்ளுவீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சிகரமான செய்தி வரும்.
ரோகிணி: உறவினரின் உதவி கிடைப்பது பற்றி சந்தேகமே. பேச்சால் சிரமம் வரலாம்.
மிருகசீரிடம் 1,2: வாழ்வில் முன்னேற சில புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: தைரியம் கூடும் நாள். நல்லவர்களுக்கு நெருக்கமாவீர்கள்.
திருவாதிரை: பயணங்களால் நன்மை கிட்டும். வருமானம் பெருகும்.
புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் போட்டிகள் விலகி லாபம் பார்ப்பீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: பொருட்களின் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும்.
பூசம்: சுபநிகழ்ச்சிகள் பற்றிய முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள்
ஆயில்யம்: நீண்ட நாட்களாக இருந்த தடை விலகி வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம் :

மகம்: புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பணி முயற்சிகள் கைகூடும்.
பூரம்: தொழிலில் லாபம் கிட்டும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
உத்திரம் 1: திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருந்த நிலை மாறும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பணப்பற்றாக்குறையால் கைமாற்று வாங்க வேண்டி வரும்.
அஸ்தம்: நிம்மதி வரும். அதிகாரிகள் காட்டி வந்த கசப்புகள் நீங்கும்.
சித்திரை 1,2: வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள்.

துலாம்:

சித்திரை 3,4: பலகால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனபலம் அதிகரிக்கும்.
சுவாதி: பெண்களுக்கு சுபநிகழ்ச்சிகள் பற்றிய விருப்பங்கள் கைகூடும்.
விசாகம் 1,2,3: கவலை தீரும். கலைஞர்கள் முயற்சியைக் கூட்டுவீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: நிம்மதி நிறையும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வீர்கள்.
அனுஷம்: பணியாளர்கள் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கேட்டை: உங்கள் செயல்திறன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பிறர் திணறுவர்.

தனுசு:

மூலம்: பணவரவு உண்டு. வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள்.
பூராடம்: இளைஞர்கள் போராடி வெல்வீர்கள். பேச்சில் கவனம் தேவை.
உத்திராடம் 1: முயற்சிகளில் தடை ஏற்படக்கூடும். தம்பதிகளின் நெருக்கம் கூடும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள். நட்பு வட்டம் விரியும்.
திருவோணம்: எதிர்பார்த்தது நடைபெறாமல் பதற்றம் ஏற்படலாம். பொறுமை தேவை.
அவிட்டம் 1,2: அதிகாரியின் கட்டளையை விருப்பமின்றி நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: இளைஞர்கள் தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சதயம்: நல்லவர் ஒருவர் அறிமுகமாகி உங்களுக்கு நன்மை செய்வார்.
பூரட்டாதி 1,2,3: நண்பர்கள் உங்களை கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுப்பார்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையாட்களை மாற்றுவீர்கள்.
உத்திரட்டாதி: வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியான நாள். குடும்பத்தினர் உதவுவர்.
ரேவதி: உங்களை நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வாகன வசதி பெருகும்.

15th September Today Raasi Palankal

Related posts

21-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

யுவன் சங்கர் ராஜா கொடுத்த “வலிமை” பட அப்டேட்..!

Tharshi

மனைவி தூக்கு மாட்டி தற்கொலை செய்ததை தடுக்காமல் வீடியோ எடுத்த கணவர்..!

Tharshi

Leave a Comment