இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில், உள்நாட்டு பால்மாவின் விலையும் அதிகரிக்கப்பட வேண்டும் என உள்நாட்டு பால்மா உற்பத்தி நிறுவனங்கள் கோரியுள்ளன.
இவ்வாறு நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உள்நாட்டு பால்மா உற்பத்தி நிறுவனங்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பால்மா உற்பத்திகளை மேற்கொண்டு வருவதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், பால் விநியோகிப்போரின் செலவீனங்களும் அதிகரித்துள்ளமையினால் உள்நாட்டு பால்மா உற்பத்திக்கான செலவீனங்களும் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதனால், உள்நாட்டு பால்மாக்களின் விலைகளையும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.