குறும்செய்திகள்

வெலிக்கடை சிறைக் கூரையில் இன்றும் தொடரும் போராட்டம்..!

Welikada prisons continues protest

கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கையானது, இன்று தொடர்ந்தும் 03ஆவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு வழங்கும் மன்னிப்பை, நீண்டகாலம் சிறைகளில் வாடும் தமக்கும் வழங்குமாறுகோரி இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது, மரண தண்டனை விதிக்கப்பட்ட குறைந்தது பத்து கைதிகள் தங்கள் நீண்ட சிறை தண்டனையை குறைக்கக்கோரி நேற்று முன்தினம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க, போராட்டம் நடத்திய கைதிகளுடன் கலந்துரையாடியிருந்தார். இருப்பினும், பேச்சுவார்த்தைக்கு மறுப்பு வெளியிட்ட அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Welikada prisons continues protest

Related posts

இந்த மாத இறுதியில் முன்பள்ளிப் பாடசாலைகள் திறக்கப்படும்..!

Tharshi

அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகருடன் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் குறித்து கலந்துரையாடல்..!

Tharshi

லிஃப்ட் விபத்தில் 30 வயது நபர் உயிரிழப்பு..!

Tharshi

Leave a Comment