12 வயது முதல் 19 வயது வரையான சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அநுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய வைத்தியசாலைகளிலும் இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
விசேட வைத்தியர்களின் முழுமையான கண்காணிப்பின் கீழ், இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.
The Covid19 Vaccine program for minors begins today