நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையிலிருந்து கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் நேற்று (24) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டவர் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கைக்குண்டை தயாரிப்பதற்கு உதவிய குற்றச்சாட்டு தொடர்பில் திருகோணமலை பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.