சூப்பர் சிங்கர் 8 பைனல் போட்டியில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டத்தை அறிவித்திருந்தார்.
இந்த சூப்பர் சிங்கர் 8 போட்டியில் அபிலாஷ், பரத், அணு, முத்து சிற்ப்பி, ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி ஆகிய ஆறு பேர் பைனல் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.
ஸ்ரீதர் சேனாவை ஏற்கனவே நடுவர்கள் வெளியேற்றி இருந்த நிலையில் நடுவர்களை தவறாக திட்டி ஸ்ரீதர் சேனாவின் ரசிகர்கள் செய்த அட்டகாசத்தால் அடுத்த சீசனுக்கு வர மாட்டேன் என பென்னி டயல் கூறிவிட்டார்.
எப்படியும் நடுவர்கள் தேர்வு செய்தால் முடிவு மாறும் என்பதால் மக்களிடம் வாக்களிக்கும் உரிமை கொடுக்கப் பட்டது. இதனை தொடர்ந்து மக்களின் வாக்குகள் படி சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னராக ஸ்ரீதர் சேனா தேர்வு செய்யப் பட்டார்.
இரண்டாவது இடத்தை பரத் பெற்றுக் கொண்டார். மூன்றாம் இடத்தை அபிலேஷ் பெற்றுக் கொள்ள மானசி, அனு, முத்து சிற்பி மூவருக்கும் எந்த இடமும் இல்லை.