குறும்செய்திகள்

30-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

30th September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 30.2021

பிலவ வருடம், புரட்டாசி 14, வியாழக்கிழமை,
தேய்பிறை, நவமி திதி இரவு 7:33 வரை,
அதன்பின் தசமி திதி, புனர்பூசம் நட்சத்திரம் இரவு 11:59 வரை,
அதன்பின் பூசம் நட்சத்திரம், அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : கேட்டை, மூலம்
பொது : தட்சிணாமூர்த்தி, குருவாயூரப்பன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: வாழ்வில் முன்னேறுவதற்கான திட்டங்களை யோசிப்பீர்கள்.
பரணி: பேச்சினால் மற்றவர்களை கவருவீர்கள். மன திடம் அதிகரிக்கும்.
கார்த்திகை 1: நினைத்த வேகத்தில் சிலவற்றை முடிக்க முடியாமல் தடை ஏற்படும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: நெருங்கிய நண்பர்களால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரோகிணி: யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்வது நல்லதல்ல. கவனம் தேவை.
மிருகசீரிடம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் தாமதமாக கிடைக்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: நண்பர் ஒருவர் மூலம் நல்ல செய்தி ஒன்று கிடைக்கும்.
திருவாதிரை: முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். பரபரப்பு அதிகரிக்கும்.
புனர்பூசம் 1,2,3: குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் உற்சாகத்தை தரும்.

கடகம்:

புனர்பூசம் 4: தாயாருடன் வீண் விவாதம் செய்ய வேண்டாம்.
பூசம்: புதிய முயற்சிகள் வெற்றி பெறும். அலைச்சல் நன்மை தரும்.
ஆயில்யம்: போட்டியாளர்களைத் திறம்பட எதிர்கொண்டு வெல்வீர்கள்.

சிம்மம் :

மகம்: புதிய முயற்சிகளில் ஈடுபட்டவர்களுக்கு காலதாமதமாகக்கூடும்.
பூரம்: இளைஞர்கள் தங்கள் கடமைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
உத்திரம் 1: முயற்சியில் சிறு தாமதத்துக்குப் பிறகு வெற்றி உண்டு.

கன்னி:

உத்திரம் 2,3,4: உற்ற நண்பர் ஒருவர் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்.
அஸ்தம்: மனதிற்கு நெருக்கமான ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள்.
சித்திரை 1,2: அலைபேசி மூலம் வரும் செய்தி மகிழ்ச்சி தரும்.

துலாம்:

சித்திரை 3,4: சமூக சேவையில் புதிய அனுபவம் உண்டாகும்.
சுவாதி: உணர்ச்சிவசப்பட்டு பிறருக்கு உதவப்போய் கைப்பொருளை இழக்க வேண்டாம்.
விசாகம் 1,2,3: ஆன்லைன் மூலமாக சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: உங்களின் அந்தஸ்து உயரும். உறவினர்கள் தொடர்பு கொள்வர்.
அனுஷம்: வெளிநாட்டில் வசிப்பவர்கள் சிறு பயணமாகத் தாய்நாடு வருவர்.
கேட்டை: புதிய ரிஸ்க்குகள் எடுக்கும் முன் இருமுறை யோசியுங்கள்.

தனுசு:

மூலம்: இளைஞர்களின் செயல்பாடுகளில் அதிக கவனம் தேவை.
பூராடம்: எதிலும் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பீர்கள்.
உத்திராடம் 1: உங்களது கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: முயற்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
திருவோணம்: உங்களது தனிப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் காண்பீர்கள்.
அவிட்டம் 1,2: புதிய துறையில் ஈடுபாடும், ஆர்வமும் வரும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: பொருளாதார உதவிகள் சிறு தாமதத்துக்கு பிறகு கிடைக்கும்.
சதயம்: வங்கி தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: வெளிநாட்டுக் கல்வி, பணி தொடர்பான முயற்சி வெற்றி பெறும்.

மீனம்:

பூரட்டாதி 4: நிதி சம்பந்தமான முந்தைய முயற்சி ஒன்று பலன் தரும்.
உத்திரட்டாதி: இளைய சகோதரர் வாழ்வில் முன்னேற்றம் உண்டு.
ரேவதி: உழைப்பு கூடும். குழந்தைகளின் வாழ்வில் நன்மை நிகழும்.

30th September Today Raasi Palankal

Related posts

யாழில் ஒரு வாரத்தில் கரையொதுங்கிய ஆறு சடலங்கள்..!

Tharshi

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடிக்கும் குமார் சங்கக்கார..!

Tharshi

1,000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை உடையாமல் கண்டெடுப்பு : இஸ்ரேலில் ஆச்சரியம்..!

Tharshi

Leave a Comment