குறும்செய்திகள்

தேசிய அடையாள அட்டை அச்சிடும் பணிகளை இந்தியாவிற்கு வழங்க முயற்சி..!

Attempt to provide National Identity Card Printing to India

தேசிய அடையாள அட்டை அச்சிடும் பணிகளை இந்தியாவிலுள்ள மோசடி நிறுவனமொன்றுக்கு வழங்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேபோல், மலேஷியாவிலுள்ள நிறுவனமொன்றுக்கு இலங்கை நீதிமன்ற நடவடிக்கைகள் சார்ந்த ஆவணங்களைப் பாதுகாப்பதற்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், உள்நாட்டிலுள்ள அனைத்து அரச சொத்துக்களையும் அரசாங்கம் இவ்வாறு சூட்சுமமான முறையில் விற்பனை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

Attempt to provide National Identity Card Printing to India

Related posts

வாகன உதிரிப்பாகங்களாக மாறிய 16 கிலோ தங்கம்..!

Tharshi

21-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு..!

Tharshi

Leave a Comment