பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசிப் புதல்வர், ரோஹித்த ராஜபக்ஷ வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளார்.
இதற்கான ஆயத்தங்கள் இப்போதிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில், வரும் வருடம் ஏப்ரலுக்கு முன்னதாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற மாகாண சபைத் தேர்தலில் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ரோஹித்த ராஜபக்ஷ களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே, குருநாகல் மாவட்டத்தின் பிலபல்யமான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.