சீமெந்து, சமையல் எரிவாயு , பால் மா மற்றும் கோதுமை மா மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இடையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்தார்.
அதேபோல், தேவையற்ற அதிக விலை உயர்வுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
1 comment