BBC தமிழ் ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளரும், சுயாதீன ஊடகவியலாளருமான U.L.மப்றுக், பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு விசாரணைகளுக்காக, எதிர்வரும் 8ம் திகதி வருகை தருமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தினால், ஊடகவியலாளர் U.L.மப்றுக்கிற்கு இந்த அழைப்பு கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, கொழும்பில் இருந்து இயங்கும் மற்றுமொரு தமிழ் ஊடகம் ஒன்றிற்குச் சென்ற இரகசிய பொலிஸார் தகவல்கள் பதிவு செய்திருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது.