குறும்செய்திகள்

31-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

31st October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 31.2021

பிலவ வருடம், ஐப்பசி 14, ஞாயிற்றுக்கிழமை,
தேய்பிறை, தசமி திதி காலை 10:33 வரை,
அதன்பின் ஏகாதசி திதி, மகம் நட்சத்திரம் காலை 10:20 வரை,
அதன்பின் பூரம் நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அவிட்டம்
பொது : சூரியபகவான் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: நன்மைகள் நடைபெறும் நாள். போட்டி, பொறாமை நீங்கும்.
பரணி: எடுத்த விஷயத்தை எளிதில் முடித்து நிம்மதி காண்பீர்கள்
கார்த்திகை 1: மற்றவர் பொறாமையால் ஏற்பட்ட பிரச்னைகள் சுலபமாக தீரும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: முயற்சியில் இனிய திருப்பம் உண்டாகி உங்களை மகிழ்விக்கும்.
ரோகிணி: வழக்கமான பணியில் திடீர் மாற்றத்தைச் செய்து வெல்வீர்கள்.
மிருகசீரிடம் 1,2: அலைச்சல் அதிகமாகும். வெளிமனிதர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: முயற்சியில் நீங்கள் நினைத்ததைவிட தாமதமான பலன் கிடைக்கும்.
திருவாதிரை: நேர்மையாக வியாபாரம் செய்து வாடிக்கையாளர்களை மகிழ்விப்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: சிறப்பு குணத்தால் பல விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: உங்களுக்கு பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
பூசம்: முன்பைவிட ஆரோக்கியம் சீராகும். நல்லவர் தொடர்பு நீடிக்கும்.
ஆயில்யம்: முடிவுக்கு வராமல் இழுபறியாக இருந்த விஷயம் சுமுகமாக முடியும்.

சிம்மம் :

மகம்: பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். நட்பு வட்டம் விரியும்.
பூரம்: உணர்ச்சிகளையும், கோபத்தையும் கட்டுப்படுத்திக் கொள்வீர்கள்.
உத்திரம் 1: தொழிலில் நிலைமைகள் மேம்படும். லாபம் கிடைக்கும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: கொடுத்த வாக்கை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள்.
அஸ்தம்: மனதில் ஏதேனும் கவலை உண்டாகி அது இன்றே தீரும்.
சித்திரை 1,2: உடற்சோர்வு வரலாம். வாகனம் தொடர்பான செலவுகள் குறையும்.

துலாம்:

சித்திரை 3,4: புதிய நபர்களின் அறிமுகம் கிடைத்து அவர்களால் நன்மையும் உண்டாகும்.
சுவாதி: கலகலப்பான நிகழ்வுகளில் பங்கேற்று மகிழ்ச்சி அடைவீர்கள்.
விசாகம் 1,2,3: கடந்த சில நாட்களாக இருந்து வந்த சிறு பிரச்னைகள் நீங்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: வியாபார விருத்திக்கு உங்கள் பேச்சு கைகொடுக்கும்.
அனுஷம்: பொழுதுபோக்கான விஷயங்களில் மனம் ஈடுபடும்.
கேட்டை: முன்பு ஏற்பட்ட சிக்கல்களில் இருந்து இன்று விடுபடுவீர்கள்.

தனுசு:

மூலம்: பணியிடத்தில் சலுகைகள் கிடைக்கும். பொருளாதார பிரச்னை குறையும்.
பூராடம்: தடைபட்டிருந்த பணிகளை இன்று நல்லபடியாக முடிப்பீர்கள்.
உத்திராடம் 1: அலுவலக நண்பர்களின் ஒத்துழைப்பினால் ஆதாயம் உண்டு.

மகரம் :

உத்திராடம் 2,3,4: ரகசியத்தைப் பரப்பினால் பிரச்னை உருவாகக்கூடும். கவனம் தேவை.
திருவோணம்: உறவினர் பகை அகலும். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும்.
அவிட்டம் 1,2: மற்றவர்களுடைய மனம் நோகாதபடி கவனமாக பேசுங்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: திட்டங்கள் வகுப்பதில் அலட்சியம் காட்டாதிருப்பது நல்லது.
சதயம்: செலவுகளால் தடுமாற்றம் ஏற்படாமல் உறுதியாக இருங்கள்.
பூரட்டாதி 1,2,3: பயணங்களை முன்கூட்டியே சரியாகத் திட்டமிடுவது நல்லது.

மீனம்:

பூரட்டாதி 4: தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்
உத்திரட்டாதி: பணியிடத்தில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்.
ரேவதி: உங்களின் அறிவுத்திறன் அதிகரிக்கும். நண்பர்களால் நன்மை ஏற்படும்.

31st October Today Raasi Palankal

Related posts

நாமல் ராஜபக்ஷ திடீர் கென்யா விஜயம்..!

Tharshi

கொவிட் தொற்று காரணமாக பிறந்து 8 நாட்களேயான குழந்தை மரணம்..!

Tharshi

ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற உகாண்டா நாட்டு வீரர் : டோக்கியோவில் மாயம்..!

Tharshi

Leave a Comment