நாட்டில் மேலும் 488 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 560,298 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 528,806 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகரித்துள்ளது. இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்த 26 பேரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,258 ஆக அதிகரித்துள்ளது.
4 comments