அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் வழமைக்கு கொண்டு வருவதற்கு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன, கல்வி அமைச்சுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
தற்போது நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பாடசாலைகளுக்கு பகுதி பகுதியாகவே மாணவர்கள் அழைக்கப்பட்டு வந்திருந்தனர்.
எனினும் புதிய தீர்மானத்திற்கு அமைய, அனைத்து மாணவர்களையும் பாடசாலைகளுக்கு நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒருமித்து அழைக்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1 comment