22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றில் இன்று 178 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 178 மேலதிக வாக்குகளால் 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட மூல வரைபு மீதான வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட 44 பேர் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், 22 ஆவது திருத்த வரைபுக்கு சரத் வீரசேகர மாத்திரம் எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
The 22nd Constitutional Amendment Act was passed