தனுஷ்க குணதிலக்கவின் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பில், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக, இன்று மாலை சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
உலகக் கிண்ண தொடரில் பங்குபற்றுவதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த வேளையில், இலங்கை அணி வீரர் தனுஷ்க குணதிலக்க பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலேயே தசுன் ஷானகவிடம் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு முன்னிலையில் தசுன் ஷானக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அத்துடன், இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், குறித்த குழு முன்னிலையில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
The case of Danushka Gunathilaka by questioning Dasun Shanaka
1 comment