பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைதான தனுஷ்க குணதிலக்கவுக்கு நேற்று பிணை வழங்கப்பட்டது.
தனுஸ்ககுணதிலகவின் பிணைக்கான 150.000 டொலர்களை இலங்கையை சேர்ந்த அடையாளம் தெரியாத பெண்ணொருவர் செலுத்தியுள்ளார்.
தனுஸ்கவிற்கும் குறிப்பிட்ட பெண்ணிற்கும் இடையிலான உறவு குறித்த எந்த விபரங்களும் வெளியாகவில்லை.
அதேநேரம் தனுஷ்க தென்மேற்கு சிட்னியில் தங்குவதற்கான ஒழுங்குகளையும் அங்குள்ள இலங்கையர்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
ஆரம்பத்தில் அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்த போதும், 38,000 டொலர்கள் கட்டணம் பெற்று வாதிட்ட தமிழ் சட்டத்தரணி ஒருவர் அவருக்கு பிணை பெற்றுக் கொடுத்தார்.
Danushka received 150000 Dollars from a SriLankan Woman