சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு எவ்விதமான புதிய விதிமுறைகள் ஒன்றும் கிடையாது என்று அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகையில்..,
“சீனாவிலிருந்து வரும் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கும் விதிகளில் அவுஸ்திரேலியா எந்த மாற்றமும் செய்யவில்லை.
நாங்கள் சுகாதார நிபுணர்களிடமிருந்து தகுந்த ஆலோசனைகளை தொடர்ந்து பெறுவோம்.
மேலும், அவுஸ்திரேலியாவிலும் உலகெங்கிலும் பரவி வரும் புதிய வகை கொரோனாவின் தாக்கத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
1 comment