உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இத் தினத்தை இலக்காக கொண்டு பூர்வாங்க திட்டங்கள் வகுக்கப்படுவதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நாள் எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படும்.
மேலும், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.