ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது ஏற்கனவே கூறிய விடயங்களையே ஜனாதிபதி மீண்டும் கூறியதாகவும், எந்த முன்னேற்றங்களும் இல்லை என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இந்நிலையில், அடுத்தவாரம் 10ஆம், 11ஆம் 12ஆம் திகதிகளில் தமிழ் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் தொடர் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
இதன்போது, தாங்கள் வழங்கவுள்ள அறிக்கைக்கு தீர்க்கமான பதிலை ஜனாதிபதி வழங்கத் தவறினால், இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுப்பதா இல்லையா? என தீர்மானிக்கப்படும் எனவும் சுமந்திரன் கூறினார்.