காற்பந்து வீரர் க்றிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவின் அல் நஷ்ர் காற்பந்து கழகத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
இதற்காக அவருக்கு வருடாந்தம் 200 மில்லியன் யூரோவுக்கும் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக சவுதி அரேபியா, 2030ம் ஆண்டு உலக்கிண்ணத் தொடரை நடத்துவதற்கான பிரச்சார நடவடிக்கைகளுக்காக க்றிஸ்டியானோ ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக அவருக்கு 200 மில்லியன் யூரோ வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அவர் இந்த வருடத்தில் 400 மில்லியன் யூரோவுக்கு அதிக தொகையை வருமானமாக ஈட்டியுள்ளார்.