முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு கனடாவின் அரசாங்கம் பொருளாதார தடையை விதித்துள்ளது.
அவர்களுடன் இராணுவ அதிகாரிகளான சுனில் ரத்நாயக்க மற்றும் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோரின் பெயர்களும் தடை பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
1983 – 2009ம் ஆண்டு வரையில் இலங்கையில் நடைபெற்ற திட்டமிட்ட மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் இந்த பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.