களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் இன்றிரவுடன் செயலிழக்கும் என்று மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலையத்துக்கு தேவையான நெப்தா எரிபொருள் இன்னும் வழங்கப்படவில்லை. அதனால் அதன் பணிகளைத் தொடர முடியாது என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையம் தொழிற்படாவிட்டால், 165 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்னோட்டத்துக்கு இல்லாமல் போகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
1 comment