குறும்செய்திகள்

துருக்கி- கிரீஸ் எல்லையில் நேருக்கு நேர் கார்கள் மோதி விபத்து: 6 அகதிகள் பலி..!

துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 10 அகதிகளுடன் பயணித்த கார் எதிரே வந்த காருடன் மோதிய விபத்தில் 06 அகதிகள் பலியாகியுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் தெரியவருகையில்..,

துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 10 அகதிகள் காரில் பயணம் செய்தனர். அவர்கள் துருக்கி- கிரீஸ் எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது அங்கு பொலிசாரை கண்டனர்.

எனவே அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக தவறான பக்கத்தில் அதாவது சாலையின் மறுபுறமாக சென்றனர்.

அப்போது எதிரே வந்த மற்றொரு கார் எதிர்பாராதவிதமாக மோதினர். இதில் காரில் இருந்த டிரைவர் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பிசிசிஐ – இலங்கை கிரிக்கெட் போர்ட் பேச்சுவார்த்தை : டி20 உலகக்கோப்பையை இலங்கையில் நடத்தும் வாய்ப்பு..!

Tharshi

Xbox One to launch in China this month after all

Tharshi

ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் : பிரிட்டன் அறிவிப்பு..!

Tharshi

5 comments

Leave a Comment