பீட்ரூட் மற்றும் கேரட்டில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த சாலட்டில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இந்த சாலட் கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அந்தவகையில், சுவையான பீட்ரூட் – கேரட் சாலட் எப்படி செய்வது என்று பார்ப்போமா..?
தேவையான பொருட்கள் :
துருவிய பீட்ரூட் – 1/2 கப்
துருவிய கேரட் – ½ கப்
தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
ஊறவைத்த நிலக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் – பாதி பழம்
மிளகுத் தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
தாளிக்க :
கடுகு, உளுத்தம் பருப்பு – ½ டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணெய் – அரை டீஸ்பூன்
செய்முறை :
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அகலமான பாத்திரத்தில் துருவிய பீட்ரூட், கேரட், தேங்காய் போட்டு கிளறவும்.
* பின்னர் அதில் நிலக்கடலை போட்டு கிளறவும்.
* மேலும், இதில் மிளகு தூள், உப்பு போட்டு கலக்க வேண்டும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து சாலட்டில் போட்டுக் கிளற வேண்டும்.
* கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து பரிமாறவும்.
சத்து நிறைந்த பீட்ரூட் – கேரட் சாலட் ரெடி… 🙂