குறும்செய்திகள்

இன்று இதுவரை 2715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Corona infection confirmed for 2715 people

நாட்டில் மேலும் 573 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அந்தவகையில், இன்றைய தினத்தில் இதுவரை 2,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 216,111 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,811 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 182,238 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,910 ஆக அதிகரித்துள்ளது.

Corona infection confirmed for 2715 people

Related posts

நாட்டையே உலுக்கிய அஞ்சலி மரண வழக்கு : ஆள் மாறாட்டம் அம்பலம்..!

Tharshi

பெண்களின் இடுப்பு சதையை குறைக்கும் எளிய வழிமுறை..!

Tharshi

நீர்வேலியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி காதலனுடன் கைது..!

Tharshi

Leave a Comment