சினோபார்ம் இரண்டாவது தடுப்பூசியை இன்றைய தினத்தில் பெற்றுக்கொள்ள திகதி குறிப்பிட்டிருந்தும் கையடக்கத் தொலைபேசியில் குறுந்தகவல் கிடைக்காத நபர்கள், இன்றைய தினம் (10) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் தமக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் தொற்றுநோய் விஷேட மருத்துவ நிபுணர் தினுகா குருகே அது தொடர்பில் தெரிவிக்கையில்..,
முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் அதே இடத்திற்கு இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு செல்வது அசௌகரியமாக காணப்பட்டால், அவர்களும் சுகததாச விளையாட்டரங்கில் தமக்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், கடந்த மாதம் 10 ஆம் திகதி முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு இன்றையதினம் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.