நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 4 மணிக்கு நீக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், 23 ஆம் திகதி இரவு 10 மணி வரையில் இவ்வாறு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 வரையில் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட போதிலும் மாகாண இடையிலான பயணக்கட்டுபாடு நீக்கப்படமாட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கூட்டங்கள், பொது இடங்களில் ஒன்று கூடல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச ஊழியர்களின் சேவை எதிர்வரும் காலங்களில் கூட ஒன்லைன் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Travel restrictions will be relaxed on the 21st June at 4 am