பாகற்காய் ஊறுகாய் மிகவும் அருமையாக இருக்கும். சாதத்துடன் இதனை சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
அந்தவகையில் இன்று இந்த ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாமா..?
தேவையான பொருட்கள் :
பிஞ்சு பாகற்காய் – கால் கிலோ
தக்காளி, எலுமிச்சம்பழம் – தலா ஒன்று
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்
கடுகு, பெருங்காயத் தூள் – தலா ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
* பாகற்காயை கழுவி, ஈரம் போகத் துடைத்து, உள்ளே இருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு, நறுக்கிக் கொள்ளவும்.
* தக்காளி, பச்சை மிளகாயையும் நறுக்கிக் கொள்ளவும்.
* எல்லா காய்களையும் ஒன்று சேர்த்து… உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
* வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, காய்கறி கலவையைக் சேர்த்துக் கிளறி, ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும்.
* இதில் எலுமிச்சம்பழம் பிழிந்து கலக்கினால்…, பாகற்காய் ஊறுகாய் தயார்..!
1 comment