கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 17 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டின் 23 ராணுவ வீரர்கள், வழக்கமான பயிற்சிக்காக ஒரு ஹெலிகாப்டரில் தலைநகர் நைரோபியில் இருந்து நேற்று புறப்பட்டனர்.
இந்த ஹெலிகாப்டர், நைரோபியின் புறநகரான ஓல்டிங்காவின் எரெமெட் பகுதியில் காலை சுமார் 8 மணிக்கு பறந்து கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் விபத்துக்குள்ளானது.
அந்த ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணம் செய்த 17 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.