திடீர் சுகயீனம் காரணமாக, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தடுப்பு காவலில் இருந்த நிலையிலேயே, திடீர் சுகயீனம் காரணமாக ரிஷாட் பதியூதீன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.